2025 ஹஜ்: தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணம்

Share or Print this:

2025 ஆம் ஆண்டிற்கான புனித ஹஜ் யாத்திரை, உலகெங்கிலும் இருந்து வரும் கோடிக்கணக்கான யாத்ரீகர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, அதிநவீன தொழில்நுட்பங்களை சவுதி அரேபியா அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் கருவிகள், நவீன உள்கட்டமைப்புகள் மற்றும் டிஜிட்டல் சேவை வழங்குநர்கள் முன்னெப்போதையும் விட அதிக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

பயணத்தை எளிதாக்கும் திட்டங்கள்:

  • “மக்காவுக்கான பாதை” (Road to Makkah) திட்டம்: பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து வரும் யாத்ரீகர்களுக்கான குடிவரவு செயல்முறைகளை எளிதாக்குகிறது. இதன் மூலம், யாத்ரீகர்கள் தங்கள் புறப்படும் நாட்டிலேயே விசா மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொள்ள முடியும், சவூதி அரேபியாவில் அவர்களின் வருகை சீராகவும் சிரமமின்றியும் அமைகிறது.
  • “நுசுக்” (NUSUK) தளம்: ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமானது, இ-விசா, தங்குமிட ஏற்பாடுகள் முதல் நேரடி வழிகாட்டுதல் வரை 120 க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்குகிறது. யாத்ரீகர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும் தருணத்திலிருந்தே முழுமையான ஆதரவைப் பெற இது உதவுகிறது.

கூட்ட நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு:

  • சவூதி தரவுத் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையமான SDAIA, “பசீர்” (Baseer) மற்றும் “சவாஹெர்” (Sawaher) போன்ற மேம்பட்ட தளங்களை நிறுவியுள்ளது. செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இந்த அமைப்புகள், யாத்ரீகர்களின் அசைவுகளையும் நகர்வுகளையும் கண்காணித்து பகுப்பாய்வு செய்கின்றன. அதிக நெரிசல் ஏற்படும் இடங்கள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளை எச்சரித்து, தவாப் மற்றும் ஸஈ போன்ற கிரியைகளில் கூட்டத்தை சீர்படுத்த உதவுகின்றன.
  • மக்கா மஸ்ஜித் அல்-ஹராமில் யாத்ரீகர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த சென்சார்கள், நுழைவு ஸ்கேனர்கள் மற்றும் மோஷன் டிடெக்‌ஷன் கொண்ட ஸ்மார்ட் கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த AI-இயங்கும் தளம், கூட்ட நெரிசலைக் குறைத்து, நெரிசல் மிகுந்த நேரங்களில் இலக்குடைய தலையீடுகளை அனுமதிக்கிறது.

சுகாதாரம் மற்றும் காலநிலை கட்டுப்பாடு:

  • முக்கிய இடங்களில் தொலைமருத்துவ ரோபோக்கள் (telemedicine robots) செயல்படுகின்றன. இவை உடனடி மருத்துவ ஆலோசனைகளை வழங்கி, உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்கின்றன.
  • நோய் அறிகுறிகளைக் கண்காணித்து, நோய் பரவல்களின் சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே கண்டறியும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • 2025 ஹஜ்ஜின் போது உயரும் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த, AI-இயங்கும் மழை உருவாக்கும் நடவடிக்கைகளை சவூதி அரேபியா ஆராய்ந்து வருகிறது. தேசிய வானிலை ஆய்வு மையம் ஏற்பாடு செய்த ஒரு பட்டறையில், நிபுணர்கள் மழை உருவாக்கும் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு வழிகாட்டுதலின் பயன்பாட்டை எடுத்துக்காட்டினர்.

பிற தொழில்நுட்ப அம்சங்கள்:

  • “பனான்” (Banan) போன்ற உயிர் அடையாளச் சான்றிதழ் கருவிகள் யாத்ரீகர்கள் எளிதான முறையில் சேவைகளை அணுகவும் பயணத்தை இலகுவாக முடித்துக் கொள்ளவும் உதவுகின்றன.
  • ஸ்மார்ட் கைப்பட்டிகள் மற்றும் அடையாள அட்டைகள்: நுசுக் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள இவை யாத்ரீகர்களின் இருப்பிடங்களைக் கண்காணிக்கின்றன, அவசர நிலைகளில் உதவுகின்றன, மேலும் புனித தளங்களில் அவசியமான வழிகாட்டுதல்களையும் வழங்குகின்றன.
  • பல்மொழி ரோபோக்கள்: மஸ்ஜித் அல்-ஹராம் மற்றும் மினா பகுதியில் பல மொழிகளில் பேசக்கூடிய செயற்கை நுண்ணறிவால் இயங்கும் ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மதரீதியான வழிகாட்டுதலை வழங்குவதோடு பல மொழிகளில் கேள்விகளுக்கும் பதிலளிக்கின்றன. அத்துடன் மாற்றுத்திறனாளி யாத்ரீகர்களுக்கு உதவியாகவும் செயல்படுகின்றன.
  • போக்குவரத்து: முக்கிய நுழைவுப் பகுதிகளில் வான்வழி டாக்ஸிகளும் சுய இயங்கும் ஷட்டில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இது போக்குவரத்துத் துறையில் ஒரு புரட்சிகரமான முக்கிய கட்டமாகும்.

பாரம்பரியத்தையும் உயர் தொழில்நுட்பத்தையும் இணைத்து, 2025 ஹஜ் பருவம் உலக முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு உள்ளடக்கிய மற்றும் ஆன்மீக ரீதியாக சக்திவாய்ந்த அனுபவத்தை உருவாக்கும் சவூதி அரேபியாவின் முயற்சிகளில் ஒரு மைல்கல்லாக அமையும்.

எமது பதிவுகளை தவறவிட வேண்டாம்!

எமது மின் மடல் சேவையில் இணைந்துகொள்ளுங்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *